தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80-வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 1,59,000 பேர் மட்டும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்குகிறது. கொரோனா காலகட்டம் என்பதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களின் விவரங்களைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு வெளியிட்டுப் பேசியதாவது, “ நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகள் அளிக்க இதுவரை மொத்தமாக 2.44 லட்ச விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 2,770 பேர் காவல்துறையினர் மற்றும் 33,189 தேர்தல் பணியாளர்கள். அதேபோல் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சம் வாக்காளர்களில் 1,59,000 பேர் தபால் வாக்குகள் மூலம் வாக்குகள் அளிக்க விண்ணப்பித்துள்ளனர் ” என்று சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.