30.6 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் சச்சின் மகன்!

இந்திய நட்சத்திர கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 21 வயதாக மகன் அர்ஜூன் டெண்டுல்கர் நாளை நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிகெட் போட்டியில் முதல் முறையாக களமிறங்க உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆறு ஐபிஎல் தொடர்களில் விளையாடி உள்ளார். பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்ற சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் போட்டிகளில் ஆலோசகராக உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் இடதுகை பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கரை நடப்பு சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் 20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட கடைசி வீரராவர். இளம் வீரரான அர்ஜூன் டெண்டுல்கர் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் மும்பை அணியில் அறிமுகமானார். மேலும் இந்த போட்டியில் விளையாடிய அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அர்ஜுன் சில ஆண்டுகளாக மும்பை அணியில் நிகர பந்துவீச்சில் ஈடுபட்டு வந்தார். மேலும் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்தார்.

இந்நிலையில், தற்போது அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றதற்கு ஒரு சிறந்த தொடக்ககால அனுபவமாக இருக்கும். மும்பை அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட், ஜாகீர் கான் போன்ற சிறப்பான அனுபவசாலிகளுடன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையில் நாளை நடைபெறும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அர்ஜூன் டெண்டுல்கர் அணியின் பயிற்சி ஆட்டத்தில் சேர்ந்துள்ளார். மும்பை அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றுள்ள அர்ஜூன் டெண்டுல்கர் அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, தவால் குல்கர்னி, ஆல்ரவுண்டர்கள் கீரோன் பொல்லார்ட் மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் ஓய்வெடுத்தால் மட்டுமே மாற்று வீரராக (substitute) விளையாட அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கள் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. தந்தையைப் போல் மகனும் கிரிக்கெட்டில் சாதிப்பாரா என்பதை கிரிக்கெட் களம்தான் முடிவுச் செய்யும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading