36.9 C
Chennai
May 30, 2024
இந்தியா பக்தி செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.  நாளை காலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.

கேரளாவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத்
தமிழ்நாடு,  ஆந்திரா,  கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.
சபரிமலையில் கார்த்திகை,  மார்கழி மாதங்களில் மண்டல பூஜை நடைபெறும்.  அதைத் தொடர்ந்து தை மாதம் மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும்.  அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.  தொடர்ந்து நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

முதல் நாளான இன்று எந்தவொரு சிறப்புப் பூஜையும் நடக்காது.  நாளை முதல் வழக்கமான பூஜைகளுடன்,  நிர்மால்ய தரிசனம்,  கணபதி ஹோமம்,  நெய் அபிஷேகம்,  உஷ பூஜை, உச்ச பூஜை,  தீபாராதனை,  புஷ்பாபிஷேகம்,  களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை,  உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதலான ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்.  இதே முறையில் மாளிகைப்புரம் மேல் சாந்தியும் தேர்வு செய்யப்படுவார்.

தொடர்ந்து 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்படும்.  தரிசனத்திற்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது.  மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10, 11 தேதிகளில் நடை திறக்கப்படும்.  அதேபோல மண்டல பூஜைக்காக வரும் நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading