அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு!

ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,

“ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வடிவமைக்கும் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் அவற்றை உருவாக்குகிறோம்.

உலகம் இதுவரை பார்க்காத மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தின் அதிகாரிகளாக நீங்கள் உள்ளீர்கள். ஏனென்றால் நான் அந்த ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பி உள்ளேன். நாங்கள் கவன குறைபாடுகளில் இருந்து விடுபட்டு, அமெரிக்காவின் எதிரிகளை நசுக்குவது மற்றும் நமது சிறந்த அமெரிக்கக் கொடியை பாதுகாப்பது போன்ற அதன் முக்கிய பணியில் நமது ராணுவத்தை கவனம் செலுத்த வைக்கிறோம்.

ஆனால் இதற்கு முன்பு ஒபாமா ஆட்சியில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடி உள்ளது. அதை ரஷியர்கள் திருடியுள்ளனர். ஆனால் தற்போது நாங்கள் ஏவுகணையை நிறைய உருவாக்குகிறோம். அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல. அதன் முக்கிய பணி தேசிய பாதுகாப்பு என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.