முக்கியச் செய்திகள்தமிழகம்

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.64 லட்சம் கடன்” – நிதியமைச்சர் பிடிஆர்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அப்போது பேசிய அவர், 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது தயாரிப்பதற்கு முன்னர் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களின் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.”

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட தகவல்களை ஆளுங்கட்சியாக வரும்போது நாங்களே வெளியிடுகிறோம். தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவும், வெளிப்படை தன்மையுடன் அரசு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்தவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.”

“தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நான்கில் ஒரு பங்கு வருவாய் குறைந்து வருகிறது. 2011-2016 அதிமுக ஆட்சியில் சுமார் 17 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% அத்தியாவசிய செலவீனங்களுக்காக பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கடந்த 5 ஆண்டுகளில் இந்த அளவு சரிவை சந்திக்கவில்லை.”

“கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னரே இந்த வீழ்ச்சி தொடங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன் உள்ளது. தமிழ்நாட்டின் தொழிற்துறை உற்பத்தி் பீகார், உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!

Web Editor

பெங்களூரை வீழ்த்தியது தோனி படை: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் சிஎஸ்கே

EZHILARASAN D

வீடுகளுக்கு வரும் கொரோனா தடுப்பூசி!

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading