சென்னையில் இருந்து துபாயிக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 19 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையைத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது துபாயிற்கு செல்வதற்காக சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த முகமது உசேன் (வயது 30) என்பவர் விமானத்திற்காக காத்திருந்தார். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அவரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். விசாசரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது கைப்பைகளில் ரகசிய அறைகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுப்பிடித்தனா். அவற்றில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இவரிடம் இருந்து ரூ. 19 லட்சத்தி 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக முகமது உசேனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று ரூ.97 லட்சம் மதிப்பிலான சவூதி ரியால்கள் கடத்த முயன்ற போது அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.








