சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியில் அருள்மிகு ஜோதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழா முடிவடைந்த பின்பு கோவில் நிர்வாக குழுவினருக்கும், ஒரு சில தரப்பினருக்கும் வரவு செலவு கணக்கு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, கலவரம் ஏற்படும் நிலை உருவானதால் வருவாய்த்துறை, காவல் துறையினர் ஜோதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று யாரும் வழிப்பட கூடாது என உத்தரவு பிற்பித்து கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தின்ம மர்மநபர்கள் கோயிலின் பூட்டினை உடைத்து, உள்ளே இருந்த தங்க நகைகளையும், உண்டியல்களை உடைத்தும் கொள்ளையடித்தனர். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்த காட்சிகளின் ஹார்டு டிஸ்க், மானிட்டர்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.