மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 10,000 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று 7,000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, இன்று மீண்டும் 10,000 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசுடன் தைவான் நிறுவனம் ஒப்பந்தம்!

இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 542 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 175 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 2 லட்சத்து 40 ஆயிரத்து 14 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.