32.2 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு பணிகள் தொடக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2,000 ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியது.  இதற்காக கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது, மண்ணில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர்,முருகர்,வள்ளி,தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடு 462  ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இவற்றை தருமபுர ஆதீனம் நேரில் பார்வையிட்டார்.
மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி நேரில் பார்வையிட்டுச் சென்றார். இதனை அடுத்து சட்டநாதர் கோவில் வளாகத்தில் மிட்கப்பட்ட சிலைகள் அணைத்தும் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவைச் சேர்ந்த முனைவர் தாமரை பாண்டியன்  அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட  6 பேர்  கொண்ட  குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து  கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ,பாதுகாப்பு பெட்டக சீல் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் அகற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செப்பேடுகள் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கப்பட்டது. பின்னர்,  குழுவினர் செப்பேடுகளை ஆய்வு செய்வதன் மூலம், இந்த செப்பேடுகள் எந்த காலத்துடன் தொடர்புடையது, இவற்றில் உள்ள தகவல்கள் என்னென்ன என்பது குறித்து முழுவதும் தெரியவரும் என்றும் , இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் மட்டுமே பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு திருப்பதிகம் செப்பேடுகளில் எழுதப்பட்டு தற்போது இங்கு சீர்காழி தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading