32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மீட்பு பணிகளில் நீடிக்கும் தாமதம் – கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு பணிகள் தாமதம்  ஏற்பட்டுள்ளதால் கூடுதல் ஹெலிகாப்டர் இயக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் பணிகள் தொடக்கம்!

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.  இதனால்,  டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அதில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் மூன்றாவது நாளாக சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில்,  ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்தது. 

ஆனால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள தங்களை மீட்க இதுவரை யாரும் வரவில்லை. பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தண்ணீர் என எந்தவித பொருட்களும் வழங்கவில்லை என ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த பயணிகளில் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் மீட்பு குழு உணவு பொருட்கள் வழங்கியும்,  மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டும் வருகிறது.

நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  தனித்தீவுகளாக கிராமங்கள் தத்தளிப்பதால், தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் ஈடுபடுவதால் அனைவரையும் மீட்க மேலும் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  எனவே,  தனித்தீவுகளாக காட்சியளிக்கும் கிராமங்களில் இருந்து பொதுமக்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  கடந்த  3 நாட்களாக உணவின்றி மக்கள் தவிப்பதால் கூடுதல் ஹெலிகாப்டர்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading