முடிந்தால் தன்னை 6 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் திமுகவினர் அதற்கு தகுந்த ஆதாரம் வைத்துள்ளார்களா என கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் சந்திக்க தயார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். ஆளும் கட்சியை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக, கருத்துச் சுதந்திரத்தின் குரல் வலையை திமுகவினர் நெருக்குவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் 6 மணி நேரம் கமலாலயத்திலேயே காத்திருக்க தயார் எனவும், தெம்பு திராணி இருந்தால் தக்க ஆதாரத்தை கொடுத்து என்னை கைது செய்து அழைத்து செல்லுங்கள் என்றும் அண்ணாமலை சவால் விடுத்தார். 6 மணி நேரத்தில் என்னை கைது செய்யுங்கள், இல்லையென்றால், நீங்கள் நாளை முதல் என்னை பற்றி பேச தகுதியற்றவர்கள் என்றும் கூறினார்.