திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு உண்மையான அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும், யாராக இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, எந்த மெகா கூட்டணி அமைப்பவராக இருந்தாலும் சரி, மற்றவர்களைப் பார்த்து கேவலமாக பேசுறவராக இருந்தாலும், கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்றும், திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக, எப்போதும் அமமுக நேசகரம் நீட்டுவோம்” என அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டணி தலைமை குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்ற அவர், “ஆளுநர் பதவி என்பது நாட்டுக்கு தேவை இல்லை. ஆனால், திமுக அரசு வரம்பு மீறி ஆட்சி செய்யும் போது மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போல ஆளுநர் தேவை என்று தோன்றுகிறது” என்று குறிப்பிட்டார்.