தமிழ்நாடு மற்று புதுவையில் நாளை மறுநாள் ரம்ஜான் ; தலைமை காஜி அறிவிப்பு!

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட மறுநாளை ரம்ஜான் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள். அதன் படி இஸ்லாமியர்கள் கடந்த மாதம் முதல் ரமலான் நோன்பை தொடங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படவில்லை. இதனால் மார்ச் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளின்  தலைமை காஜி அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.