புதுச்சேரியில் ஹூட்டிங் முடித்துச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், திறந்தவெளி காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இறுதிக் கட்ட சண்டை காட்சிகள், ஹெலிகாப்டர் காட்சிகள் புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்றன. நேற்று படப்படிப்பு முடிந்து செல்லும் போது ரஜினியை காண வேண்டும் என்று ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்தை சுற்றிலும் முற்றுகையிட்டு காத்திருந்தனர்.இந்நிலையில், கேரளத்தில் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்து உலகளவில், ரூ.100 கோடியை வசூலித்த ஆர்டிஎக்ஸ்- ராபர்ட் டோனி சேவியர் படத்தின் இயக்குநர் நிகாஷ் ஹிதயாத், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் மாஸ்டர்கள் ஆகியோர் நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்புக்குப் பின் கேரவனில் இருந்து வேட்டி சட்டையுடன் இறங்கிய நடிகர் ரஜினிகாந்த், திறந்தவெளி காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.