முக்கியச் செய்திகள்தமிழகம்

புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலாவை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலா பேருந்தை சென்னை வாலாஜா சாலையில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலை துறை இணைந்து புரட்டாசி சுற்றுலா பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் சுற்றுலா பயணம் வாரத்தில் இரண்டு முறை பொதுமக்களை 6 கோவில்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக இன்று சனிக்கிழமை இந்த சுற்றுலா பயணம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.

சென்னை,திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதே போன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்பட்டுள்ளது, 55 பேர் இன்று இந்த சுற்றுலா பயணத்தில் செல்கின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர் நித்திய கல்யாண பெருமாள் கோவில், தல சயன பெருமாள் கோவில் மாமல்லபுரம், சிங்கப்பெருமாள் கோவில், திருநீர்மலை உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்களே அழைத்துச் செல்கிறோம். இந்த பயணத்தில் பக்தர்களுக்கு தேவையான உணவு நேரடியாக சாமியை தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த திட்டம் தமிழக முதலமைச்சர் சிந்தனையில் உதித்த திட்டம். கடந்த சட்டமன்ற கூட்டத்தாரில் இந்து சமய மானிய கோரிக்கைகளில் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களுக்கு திருக்கோவில் சுற்றுலாவும், புரட்டாசி மாதங்களில் திவ்ய தேசங்கள் கோவில்கள் பார்த்தசாரதி கோவில் பெருமாள் கோவில்களில் ஒரே நாளில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

அந்த கோவில்களில் வழிபாடுகள் பிரசாதங்கள் கோவிலில் வரலாற்றையும் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 55 பக்தர்கள் இந்த சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் அதனைத் தொடர்ந்து படிப்படியாக அறுபடை வீடுகள் மற்ற கோவில்களில் பொதுமக்கள் செல்ல சுற்றுலா துறையுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் 4 பேர் பலி!

உலக அளவில் இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் – நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு

Web Editor

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்!

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading