ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியில், மயங்க் அகர்வால், பேபியன் ஆலன், ஷாருக்கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் டிம் ஷீபெர்ட், ஷிவம் மாவி சேர்க்கப்பட்டதில் போட்டி மிகுந்த பரபரப்புடன் சென்றது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்குமே வெற்றி தேவைப்பட்ட நிலையில் நேற்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் அய்யர் 67 ரன்களும், திரிபாதி 34 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தார். அதன்பின் இறங்கிய நித்திஷ் ராணா 18 பந்துகளில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி உட்பட 31 ரன்கள் விளாசினார். பின் களமிறங்கிய மோர்கன், தினேஷ் கார்த்திக் ரன்கள் அடிக்க தவறினர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் இணைந்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். மயங்க் 27 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். ஆனால், அதற்கு அடுத்து களமிறங்கிய பூரான், மார்க்ரம், ஹூடா டக் அவுட் ஆனதால் அணி தள்ளாடியது.
இறுதியாக கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட 2வது பந்தில் கேஎல் ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அணியின் வெற்றி கேள்விக்குறியாக மாறியது. இதனையடுத்து மூன்றாவது பந்தில் ஷாருக்கான் சிக்ஸ் அடிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக 55 பந்துகளில் 67 ரன்களை விளாசிய கேஎல் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.