தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சேலத்தில் வருகிற 13-ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.
இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.







