முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு!

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்தது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே,  அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு செய்து தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,  நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்தது.  மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.  மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தொடர்ந்து பற்றி எரியும் குப்பை… மூச்சுவிட முடியாமல் திணறும் பொதுமக்கள்!

Web Editor

அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை கூடுதலாக இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்க பரிந்துரை..!!

Web Editor

கனமழை எதிரொலி; 3 மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading