முக்கியச் செய்திகள் இந்தியா

கோவை மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் மோடி

107 வயது இயற்கை விவசாயியான கோவை பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து பிரதமர் மோடி  ஆசீர்வாதம் பெற்றார்.

டெல்லியில் உலக சிறுதானிய மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023க்கான அதிகாரப்பூர்வ நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: “கடவுள் தனது குழந்தையுடன் தொடர்புகொள்வது போல” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். எனது பிரதமர், எனது பெருமை!’ என பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் நடால்-ஜோகோவிச்?

Web Editor

சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு

EZHILARASAN D

நீட் தேர்வை ரத்துசெய்ய துணை நிற்போம்: முதலமைச்சர் வேண்டுகோளுக்கு பழனிசாமி பதில்!

EZHILARASAN D