பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவர் பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் மார்கெட் தற்போது உயர்ந்துள்ளது.
அதனால் தற்போது தனது சம்பளத்தை ஜெயம் ரவி உயர்த்தி உள்ளாராம். பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது.
தற்போது ஜெயம் ரவி இறைவன், சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் இந்த வருடமே வெளியாக உள்ளது. அதே போல இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
அது மட்டும் அல்லாமல் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படம் 100 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இதையடுத்து அவர் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







