தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை களைகட்டுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பொங்கல் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூரியன், மழை, மண் ஆகியவற்றை வணங்கி, மண்ணோடு இணைந்து வாழ்ந்து, நாட்டின் உணவுத் தேவையை நிறைவேற்றும் விவசாயிகளின் அர்ப்பணிப்பைப் போற்றும் பொங்கல் திருநாள், பாரதப் பண்பாட்டின் அடையாளங்களுள் முக்கியமானது.
இந்தப் பொங்கல் திருநாள், தமிழகத்துக்கு வளமும், அமைதியும், நலனும் கொண்டு வரவும், தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அமைதி நிரம்பிடவும், வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







