இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!

இலங்கையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா தொடங்கியது.  இந்த விழா…

இலங்கையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா தொடங்கியது.  இந்த விழா ஒரு வாரம் நடைபெறும்.  இவ்விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ம் தேதி காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:  பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு : வரலாற்றுச் சிறப்பு மிக்கது – காங்கிரஸ் வரவேற்பு

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,  மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீமுருகன் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர்கள்,  எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் கலாச்சார விழா இன்று (ஜன.08)  கோலாகலமாக நடைபெற்றது.   இவ்விழா திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.  இந்த விழாவில் 1008 பானையில் பொங்கல் வைத்தனர்.  மேலும், 1500 பரதநாட்டிய கலைஞர்களின் பரதம் ஆடினர்.  மேலும்,  இவ்விழாவில் 500 கோலங்கள் போடப்பட்டிருந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.