முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததை அடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் செய்தித் தெடர்பாளரான நுபுர் ஷர்மா, சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. விவாதத்தின்போது, சிவபெருமான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே அதற்கு பதிலடியாக முகம்மது நபி குறித்து தான் பேசியதாக விளக்கம் அளித்த நுபுர் ஷர்மா, எனினும் தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், அவரது இந்த கருத்தை அடுத்து அவர் பாஜகவில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
முகம்மது நபிக்கு எதிரான நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெல்லி சைபர் செல்லுக்கு புகார் அளித்த நுபுர் ஷர்மா, தனக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி, போலீஸ் பாதுகாப்பு கோரி இருந்தார்.
இதை அடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.