ஆரணி அருகே 3 நாட்களாக வீட்டைப் பூட்டிக்கொண்டு பூஜை நடத்த முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தசராபேட்டையை சேர்ந்தவர் தவமணி. இவர், தனது மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் பூசாரி ஒருவருடன் இணைந்து தனது வீட்டில் கடந்த 3 நாட்களாகப் பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். பில்லி சூனியம், ஏவலை விரட்டுவதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்தி கூச்சலிட்டு அவர்கள் பூஜையில் ஈடுபடவே, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலமுறை கதவைத் தட்டியும் தவமணியின் குடும்பத்தினர் வீட்டின் கதவைத் திறக்கவில்லை. மாறாக, தங்களைத் தொந்தரவு செய்தால் அனைவரும் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்
கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இரவு நரபலி பூஜை கொடுத்தவுடன், தாங்களாகவே கதவைத் திறக்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக, அனைவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று, பூஜை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேயை விரட்டுவதாக மூன்று நாள் கதவைப் பூட்டி விட்டு உள்ளே பில்லி சூனியம் செய்த நபர்களைக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கைது செய்த போலீசார்.அவ்வாறு விசாரணை நத்தியதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரம் தசரா பேட்டை பகுதியைச் சேர்ந்த தவமணி நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி மூத்த மகன் பூபாலன். பூபாலன் தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணிபுரிந்து வருகின்றார் என்பது தெரிய வந்தது.
மேலும் இரண்டாவது மகன் பாலாஜி மகள் கோமதி மற்றும் அறியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூசாரியான பிரகாஷ். இவர்கள் தங்களுடைய வீட்டைப் பூட்டிவிட்டுக் கடந்த மூன்று நாட்களாக வீட்டில் உள்ளே பில்லி சூனியம் ஏவல் விரட்டுவதாகக் கூறி பூஜை நடத்தி உள்ளனர்.
இன்று காலை ஆறு மணி அளவில் வீட்டைப் பூட்டிவிட்டு ஆறு பேரும் உள்ளே பில்லி சூனியம் ஏவல் விரட்டுவதாகச் சிறப்புப் பூஜை நடத்தி உள்ளனர். இவர்கள் கத்தி கூச்சலிட்டு பூஜை செய்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயந்து கொண்டு ஆரணி தாசில்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆரணி கிராமிய போலீசார் மற்றும் தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் முதலில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி திறக்க கூறியுள்ளனர்.அவர்கள் ஆழ்ந்த பூஜையில் இருந்ததால் கதவை திறக்காததால் தீயணைப்புத் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திரண்டு தீயணைப்பு வீரர்களும் கதவைத் தட்டி உள்ளனர்.
இதில் நிலை தடுமாறிய உள்ளே இருந்த நபர்கள் எங்களுடைய பூஜை கெடுத்தால் நாங்கள் அனைவரும் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விடுவோம் எங்களை தடுக்காதீர்கள் என்று போலீசாரை எச்சரித்துள்ளனர்.
மேலும் உள்ளே நரபலி கொடுக்க இருப்பதால் எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களை இன்று ஒரு நாள் முழுவதும் தடுக்க வேண்டாம் இரவு நரபலி பூஜை கொடுத்தவுடன் நாங்களே கதவைத் திறக்கிறோம் அப்பொழுதுதான் எங்கள் பூஜை நிறவெறி நாங்கள் நினைத்ததை அடைய முடியும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசார் ஜேசிபி எந்திரம் கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே போக முயன்ற போது ஜேசிபி கதவை திறந்தவுடன் கதவைத் திறக்காத வண்ணம் உள்ளே இருந்தவர்களும் தடுக்கும் பணியில் ஈடுபட்டதால் முட்டி மோதிக் கொண்டு போலீசார் உள்ளே புகுந்து உள்ளே பில்லி சூனியம் விரட்ட பூஜையில் இருந்த அனைத்து நபர்களையும் வெளியே இழுத்து உள்ளனர்.
அனைவரின் கைது செய்து ஆரணி கிராமிய போலீசார் ஆரணி டிஎஸ்பி உள்ளிட்டோர் இரவு பூஜையில் கலந்து கொள்ள வரும் பூசாரி குறித்தும் நரபலி குறித்தும் கேட்டறிந்தனர். போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து ஆரணி கிராமிய காவல் நிலையம் கொண்டு வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியில் நரபலியைத் தடுத்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.