உர விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா, தாளடி பயிர்களுக்குத் தேவைப்படும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், பெரும்பாலான பகுதிகளில் பணம் கொடுத்தும் உரம் கிடைக்காததால் உழவர்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உர மூட்டை, ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது எனவும் தற்போது, உர தட்டுப்பாடு காரணமாக, பொட்டாஷ் ஒரு மூட்டை, ஆயிரத்து 700க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சில இடங்களில் ரூ.1800 முதல் ரூ.1900 வரை விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அனைத்து உரங்களுக்கும் நிலையான விலையை நிர்ணயித்து, வேறுபாட்டுத் தொகையை உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும், பழைய முறையை, மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.