மறைந்த, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவரு மான கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில முன்னாள்
ஆளுநருமான கல்யாண் சிங்கிற்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 4 ஆம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவர் உடல் நிலை மோசமானது. ரத்த அழுத்தம் குறைந்திருப்பதாகவும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக டயாலிசிஸ் செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தி ருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் லக்னோ வந்தார்.
விமான நிலையத்தில் அவரை உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், கல்யாண் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.








