ஆக்சிஜன் பற்றாக்குறை : பிரதமர் அவசர ஆலோசனை

ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு…

ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 7000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் தேவையை அதிகப்படுத்த முக்கிய அதிகாரிகள், அமைச்சரவை செயலாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மருத்துவக் குழுவின் சார்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறைப் பற்றி விவரிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்குள் தனியார் மற்றும் அரசு ஆலைகள் மூலம் 3,300 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஆலோசனையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை பற்றி உயர் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துறைத்தனர். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உரிய நேரத்தில் விரைவாகக் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் டேங்கர்கள் விரைவாக கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.