மகர ஜோதியை முன்னிட்டு கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலைக்கு வருவதால், சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனத்திற்கான விழா நடைபெற்று வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்காக மகரஜோதி தினத்தன்று பொன்னம்பல மேட்டிலும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவும் 100% நிறைவடைந்து விட்ட நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் பெருவழிப்பாதை மற்றும் புல்மேட்டுப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு குவிந்து வருகின்றனர்.
இதனால் ஐயப்பனை சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் மிக அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








