பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களாக மாற்றமில்லாமல் உயர்த்தப்பட்ட ஒரே விலையில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டுவருகிறது.
டெல்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தொடர்ந்து இன்று வரை பெட்ரொல் டீசல் விலையில் மாற்றமின்றி நீடிப்பது பொதுமக்களிடம் நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த மாதம் பெட்ரொல் மற்றும் டீசலின் விலை ஒவ்வொரு நாளும் ஒரு விலையென புதிய உச்சத்தை தொட்டு நின்றது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் தற்போது வரை அதிகபட்சமாக டெல்லியில் பெட்ரோல் விலை 91.17 பைசாவுக்கு விற்கப்படுகிறது. மும்பையில் 97.57 பைசாவுக்கு விறபனையாகிறது. சென்னையில் 93.11 பைசாவுக்கும் மற்றும் கொல்கத்தாவில் 91.35 பைசாவுக்கும் விற்பனைச்சசெய்யப்பட்டு வருகிறது.