தமிழ்நாட்டு கோயில்களுக்கும், வெளிநாட்டு கோயில்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியாக மலேசியா பத்துமலை முருகன் கோயிலுக்கு பழனி முருகன் கோயிலிருந்து பிரசாதங்கள், வஸ்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரின் போது தமிழக அரசின் நல்லிணக்க உறவை மேம்படுத்தும் வகையில் தமிழக கோயில்களில் இருந்து வெளிமாநில, வெளிநாட்டு கோயில்களுக்கு பிரசாதங்கள்,வஸ்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி பழனி தண்டாயுதப்பாணி முருகன் திருக்கோயிலில் இருந்து மலேசியா பத்துமலை முருகன் கோயிலுக்கு வஸ்திரங்கள் அனுப்பி வைக்கபட்டன.இதில் பழனி திருக்கோயில் பஞ்சாமிர்தம், சந்தனம், கௌபீன தீர்த்தம், சுவாமி மற்றும் அம்பாளுக்கு வேஷ்டி, துண்டு,கனிவர்க்கங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர்கள் ராஜசேகர் ,ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
-வேந்தன்