நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து, ஆலோசனை நடத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. ((அதில், பட்ஜெட் கூட்டத் தொடரை, இரண்டு கட்டங்களாக நடத்த பரிந்துரைத்தது.
இதனையடுத்து ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது







