30 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம்விட்டு பேச வேண்டும்- முதலமைச்சர்

போதை பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் சேர்ந்து துணைநிற்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

போதை பொருட்களுக்கு எதிராக நியூஸ் 7 தமிழ் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூலை மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது. போதைக்கு எதிராக ஒரு லட்சத்திற்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போதை பொருளுக்கு எதிராக நியூஸ் 7 தமிழின் முன்னெடுப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அரசு  முன்னெடுத்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் போதை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைபொருளுக்கு எதிராக நடவடிவக்கைகளில் நான் சர்வாதிகாரியகா மாறுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து இன்று தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை படிக்க அனைவரும் உறுதி மொழியேற்று கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை. போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு காவல் ஆய்வாளரும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் இருக்க கூடாது என உறுதி ஏற்றால் இந்த போதை பொருள் பயன்பாட்டை ஒழித்திட முடியும். முதல் வழி சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் இரண்டாவது வழி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எல்லை மாவட்டங்களில் சோதனை சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும் , கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிக படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதிகமாக போதை பொருட்கள் விற்பனையாக இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகள் அருகே அணையில் விற்கக் கூடியவை தடுக்க வேண்டும். அரசு இது தொடர்பான சட்டங்களை கடமையாக்க முடிவு எடுத்திருக்கிறது.

 

போதைப் பொருட்கள் விவரம் செய்யக்கூடியவர்கள் சொத்துக்கள் அனைத்தையும் முடிக்க முடிவெடுத்துள்ளோம். சட்டத்தை மீறுகின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது. போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை. போதைப் பொருட்களை தடுக்க வேண்டுமென்று சொல்வதற்கு காரணம் சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான்.

போதை பொருட்கள் பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும், சொந்தங்களோடு பேசுங்கள். குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள் எந்த காரணத்திலும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள் என்று முதலமைச்சர் கேட்டு கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading