மூளை சிதைவடைந்த ஒரே மகனின் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். சில மாதங்கள் முன்பே மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மகன் கார்த்தி திருவள்ளூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்ற போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரியில் மீது மோதி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூளை சிதைவு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர். அதையடுத்து பெற்றோர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு மகனையும் இழந்து விட்டோமே என கண்ணீர் மல்க அழுது புலம்பிய நேரத்தில், மற்றவர்கள் மூலமாக தன் மகன் வாழட்டுமே என தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர் அவரின் பெற்றோர். இதனையடுத்து அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகளை மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சோழன்மாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடல் மக்களின் அஞ்சலிக்கு பிறகு எரியூட்டப்பட்டது. மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.