தமிழகம் செய்திகள்

குப்பை கிடங்காக மாறி வரும் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம்!

பெரும்பாக்கம் ஊராட்சி பகுதிகளில், குப்பை கழிவுகளை ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே கொட்டுவதாக அருகில் வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில், அப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி
வைக்கப்படுகிறது.

பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம், குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் அமைந்து உள்ளது. எனவே, ஆங்காங்கே சேகரிக்கும் குப்பைகளை ஊராட்சி ஊழியர்கள் அலுவலகம் வளாகத்திலேயே கொட்டி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், கால்நடைகள் அங்கிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் நிலமை ஏற்படுகிறது. மேலும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் இறைச்சி கடைகளின் கழிவுகளை, ஊராட்சி வளாகத்தின் உள்ளே சென்று கொட்டி வருகின்றனர். இதனால் ஊராட்சி அலுவலகம் குப்பை கிடங்காக மாறி வருகிறது.

இதனால் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் துற்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

—ம. ஸ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க சென்னை காவல் துறை வலியுறுத்தல்

G SaravanaKumar

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிலும் பிரம்மிக்கவைத்த கலை நிகழ்ச்சிகள்

Web Editor

டிஜிட்டல் வானொலியில் தமிழைப் புறக்கணிப்பதா? டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Halley Karthik