உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய “ஒரு நிலையம் ஒரு பொருள்” திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய “ஒரு நிலையம் ஒரு பொருள்” திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 23 முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை ஜூலை 7 வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஜூலை 2 வரை பத்து நாட்களில் திருச்செந்தூர், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் ரூபாய் 2,81,960 மதிப்புள்ள பனைப் பொருட்கள் விற்பனை ஆகி உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய வி.கே.சசிகலா…’
மதுரையில் ரூபாய் 1,84,660 மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனையாகி உள்ளது. இந்த எட்டு ரயில் நிலையங்களிலும், கடந்த 10 நாட்களில் ரூபாய் 6,91,473 மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகி உள்ளன. மீண்டும் ஜூலை 8 முதல் 15 நாட்களுக்கு ராமேஸ்வரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி,பழனி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிப்புத்தூர், கொடைக்கானல் ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு, பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், கைத்தறி சேலை, ஆயத்த ஆடை, பேப்பர் பொருட்கள், விவசாய விளை பொருட்கள், மூங்கில் இருக்கைகள், மட்பாண்ட பொருட்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீர் திராட்சை, மல்லிகை மலர், வெண்ணெய், மர விளையாட்டுப் பொருட்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனை பொருட்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருட்களை விற்பனை செய்ய விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.
கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவு பெற்ற சுய உதவிக் குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு அளிக்கத் தகுதி பெற்றவராவார். விருப்ப மனு விண்ணப்பங்களை http://www.sr.indianrail.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை ஜூலை 5 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு என்ற 9003862967 அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.