பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் இன்று பாகிஸ்தான் அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான இமாம்-உல்-அக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பாக். அணி கேப்டன் பாபர் ஆசம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் கைகோர்த்த அப்துல்லா ஷஃபீக்கும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாபர் ஆசம் 74 ரன்களும், அப்துல்லா ஷஃபீக் 58 ரன்களும் விளாசினர்.
இதையும் படியுங்கள் : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார் – ரசிகர்கள் இரங்கல்
விக்கெட்டுகள் விழ, பின்னர் களமிறங்கிய ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் அஹமது தலா 40 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 282 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அஹமது 3 விக்கெட்டுகளும், நவீன்-உல்-அக் 2 விக்கெட்டுகளும், முகமது நபி மற்றும் ஒமர்சாய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.