நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க, மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை எந்த சூழலிலும் அதிமுகவில் இணைக்க கூடாது என மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து ஒருமித்த குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக பேச வேண்டாம் என்றும், கட்சி பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி ஆங்காங்கே எழுந்து வரும் நிலையில், கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.