தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களான கடலூர், புதுகோட்டையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். திருச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகவும். சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
4-ஆம் தேதி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 7-ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.