31.4 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குறிவைக்கும் ஓபிஎஸ் அணி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறைக்கு செல்ல வேண்டியவர் என ஓபிஎஸ் ஆதரவாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் என கடுமையாக கூறினார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கிய நாள் முதல் இரு தரப்பிலும் ஒருவருக்கு ஒருவர் எதிராக பேட்டி அளித்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸிற்கு ஆதரவாக டி.ஜெயகுமார் பேசி வருகிறார். ஒற்றை தலைமை விவகாரம் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ரகசியமாக விவாதிக்கப்பட்டதை பொதுவெளியில் போட்டு உடைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து நீண்ட மவுனத்திற்கு பிறகு  செய்தியாளர்களிடம் மனம் திறந்த ஓபிஎஸ், தனியறையில் பேச வேண்டிய விஷயத்தை பொது வெளிக்கு கொண்டு டி.ஜெயகுமாரின் செயல் கண்டிக்கதக்கது. இது ஏற்புடையதல்லை என்றார். அதற்கு பதில் அளித்த டி.ஜெயகுமார், மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் பேசிய கருத்தைதான் தாம் பொதுவெளியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தேன் என்றார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்ற விவகாரத்தை தாண்டி, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்தான் கட்சியில் பிளவை ஏற்படுத்துகிறார் என்ற எண்ணம் ஓபிஎஸ் தரப்பில் எழுந்துள்ளது.

அதன் விளைவாக பத்திரிக்கையாளர் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும், செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ்,  பொதுக்குழுவுக்கு வந்துள்ள அழைப்பிதழில் தலைமைக்கழகம் என குறிப்பிட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தில்லாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க யாருக்கும் அதிகாரமில்லை, தகுதியுமில்லை.

வரும் 11ஆம் தேதியன்று நடக்கவுள்ள கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு துதி  பாடுகிற கூட்டமாகதான் இருக்கும் என்றார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் சர்க்கஸ் கோமாளி போன்று பேசி அதிமுகவை அழித்து வருகின்றனர் என காட்டமாக கூறினார். அதுவும் ஜெயகுமார் தாம் பேசுவதை அளவோடு பேச வேண்டும், ஓ.பி.எஸ் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இது எச்சரிக்கை என்றார். அத்தோடு இல்லாமல் கடந்த ஆட்சியில் ஒரு  பெண்ணை மானபங்கபடுத்திய விவகாரத்தில் சிறைக்கு சென்று இருக்க வேண்டியவர் ஜெயகுமார். அப்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்ததால் தப்பி விட்டார். ஆனால் நாங்கள் இப்போது சும்மாவிடமாட்டோம் என்றார்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading