குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும்
யஷ்வந்த் சின்ஹா தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்ட சென்னை வந்தடைந்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம்
24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு
செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து யஷ்வந்த் சின்ஹா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கூட்டணி கட்சி
மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரவு
திரட்டி வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து ஆதரவி திரட்ட இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த யஷ்வந்த் சின்ஹாவிற்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.
அந்த வகையில் இன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்
தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
அதற்காக சற்று முன் திருவனந்தபுரத்தில் இருந்து விமான மூலம் யஷ்வந்த் சின்ஹா
சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் யஸ்வந்த் சின்ஹா காரில் புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை
சந்திக்கின்றார். மேலும் கூட்டனி கட்சி எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோரையும் சந்திக்கின்றார்.
அதனை தொடர்ந்து வரவேற்புகளை முடித்துக் கொண்டு இரவு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் ஜூலை 1ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராய்ப்பூர் புறப்பட்டு செல்கிறார்.








