ஆன்லைன் ரம்மி விபரீதம்; இளைஞர் தூக்கிட்டுஉயிரிழப்பு

விழுப்புரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரத்தை அடுத்த சேந்தனூரை சேர்ந்தவர் பச்சையப்பன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு…

விழுப்புரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொணட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரத்தை அடுத்த சேந்தனூரை சேர்ந்தவர் பச்சையப்பன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயது பெண் குழந்தை உள்ளனர். கடந்த ஒருவாரத்திற்கு முன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.5 லட்சம் அளவிற்கு இழந்ததாக தனது மனைவியிடம் தெரிவித்து விட்டு வீட்டிலேயே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பச்சையப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டார். கணவர் தூக்கில் தொங்குவதை கண்ட மனைவி புஷ்பா கதறி அழுதியதை தொடர்ந்து அக்கம்பக்கதினர் வீட்டிற்குள் சென்று பார்த்துவிட்டு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட 5 லட்சம் அளவிற்கு அவர் கடன் வாங்கியதும், அந்த பணத்தை விளையாட்டில் இழந்ததால், மன வேதனையில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.