ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார் பவானி தேவி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டோக்கியோவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய பவானி தேவி, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது, தான் பயன்படுத்திய வாளை முதலமைச்சருக்கு பரிசாக அளித்த பவானிதேவிக்கு, அதே வாளை திரும்ப பரிசாக அளித்த முதலமைச்சர், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

பின்னர் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதனையும் பவானி தேவி சந்தித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பவானிதேவி, ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதாக முதலமைச்சர் தன்னை பாராட்டியதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் – திருமாவளவன் எம்.பி.

EZHILARASAN D

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு; தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

G SaravanaKumar

ஃபார்முக்கு திரும்பினார் டேவிட் வார்னர்.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

Halley Karthik