நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு கடந்த ஜுலை மாதம் 13-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் 10-ம் தேதி வடை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், விண்ணப்பங்களை சரிசெய்து கொள்ள வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ((இது குறித்த முழுமையான விவரங்களை அறிய http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.