நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு கடந்த ஜுலை மாதம்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு கடந்த ஜுலை மாதம் 13-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை வரும் 10-ம் தேதி வடை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Representational Image

மேலும், விண்ணப்பங்களை சரிசெய்து கொள்ள வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ((இது குறித்த முழுமையான விவரங்களை அறிய http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.