அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு ஒரு வாரம் முன்பு குடல் இரப்பை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் @OfficeOfOPS அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். pic.twitter.com/6uZHXBX8mY
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 1, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு.@OfficeOfOPS அவர்களின் இணையரும், மக்களவை உறுப்பினர் திரு.@OPRavindhranath அவர்களின் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 1, 2021
சக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் அவர்களின் தாயாரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியுமான விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். #RIP pic.twitter.com/sDP8AW5Z33
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 1, 2021
இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த விஜயலட்சுமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயலட்சுமியின் உயிரிழப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கனிமொழி எம்.பி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று(செப்.1) அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிர மாரடைப்புக்கு உள்ளானார். உடனடியாக இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்டோர் தக்க சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.