29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓ.பி.எஸ். அதிமுகவிலேயே இல்லை; பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே நடந்து விட்டது -கடம்பூர் ராஜு

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலேயே இல்லை, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ கூறினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து கோரிக்கையும் ஏற்றுக்கொண்டார்  என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலேயே இல்லை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. நடந்து முடிந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர் கலந்து கொண்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்துள்ளனர். இதுதான் அமைப்பு ரீதியான அதிமுக உள்ளது. ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர் கருத்து அதிமுகவுக்குப் பொருந்தாது என பேசினார்.

அத்துடன், கூட்டணி என்பது தேர்த்தலுக்காக அமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் ஆனால் திமுகவுடன் கூட்டணியில் இருப்பவர்களெல்லாம் பேரத்தின் அடிப்படையிலிருக்கின்றனர். முதல்வர் தொகுதியிலே ஒரு கால்பந்து வீராங்கனை மரணம் என்பது வேதனை அளிக்கிறது பொதுவுடைமை கட்சிகள் எல்லாம் கால்பந்து வீராங்கனை மரணம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர் தற்போது சுகாதாரத் துறைக்குச் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத் துறை உள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில் ரெட் ஜெயின் மூவிஸ் மூலம் வந்தால் தான் தமிழகத்தில் படங்கள் திரையிடப்படும் முடியும் என்ற சூழல் உள்ளது. தற்போது படம் எடுத்தாலும் வெளியிடப்பட முடியாத சூழ்நிலை தான் உள்ளது. அதிக பட்ஜெட்டில் படம் எடுத்தால் கூட ரெட் ஜெயின் மூலம் தான் திரையிட முடியும் என்ற சூழல் உள்ளது. எதிர்காலத்தில் படம் வெளியிடுவது மட்டும் இல்லாமல் படம் எடுக்கவும் முடியாது. என்ற சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் திரைத்துறை அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என கூறினார்.

செய்தி விளம்பரத்துறையில் அரசின் திட்டங்களை நேரடியாக மக்களுக்குக் கொண்டுசென்று வருகிறது ஆனால் தற்போது அரசு நிகழ்ச்சி மற்றும் முதல்வர் நிகழ்ச்சிகளைத் தனியார் மையமாக்குவது என்பது மோசமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading