ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு

திருவாரூரில் ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் மது பாஷினி. நர்சிங்…

திருவாரூரில் ஆங்கிலம் படிக்க முடியவில்லை என நர்சிங் மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் மது பாஷினி. நர்சிங் படித்து வந்த மது பாஷினி தனக்கு ஆங்கிலம் வரவில்லை என்பதால் படிக்கப் பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பெற்றோர்கள் படிக்கச்சொல்லி கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.