கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக பரவி வரும் நோரா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வாமிட்டிங் பக்’ என்றழைக்கப்படும் நோரா தொற்றின் எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளதாகவும் இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 வாரங்களில் 154 பேர் நோரா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவிலும் இந்த தொற்றால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நோரோ வைரஸ் என்பது புதுவகையான தொற்று இல்லை என்றாலும் இது குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். திடீர் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கும் என இங்கிலாந்து பொது சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதில் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் கை கால்களில் வலி ஆகியவையும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.