நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவு வாயில் கதவை திறக்க தாமதமாக்கிய காவலாளியை தாக்கிய பெண்ணிற்கு நொய்டா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம்பெண் ஒருவர் தனது காரில் வந்துள்ளார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் காரை விட்டு இறங்கி பணியில் இருந்த காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்து பணியில் இருந்த காவலாளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து பணியில் இருந்த காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணின் மீது ஐபிசி 153ஏ, 323, 504, 502(2) மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தகாத வார்த்தைகளால் காவலாளியை திட்டிய பெண்ணை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நொய்டா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தனக்கு ஜாமின் வழக்கக்கோரி பெண் வழக்கறிஞர் பாவ்யா ராய் நொய்டா நீதிமன்றதத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் பாவ்யா ராய்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.








