அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என யாருக்கும் தெரியாது என ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈரோடு அக்ரஹாரம், கருங்கால் பாளையம், மரப்பாலம் பகுதியில் பொதுமக்களுக்கு விளையாட்டு துறை அமைச்சரும் இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வாகனம் மூலமாக நன்றி தெரிவித்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை நேரில் பார்த்து முறையிட்டுள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லும் முன் என்ன பேசினார், டெல்லி சென்று வந்த பின் என்ன பேசினார் என்று அனைவருக்கும் தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூறினார்.
ஆனால் நேற்று நடந்த கூட்டத்திற்கு பின் இரண்டு பேரும் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். மேலும் அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என யாருக்கும் தெரியாது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி அணி என பல அணிகள் அதிமுகவில் உள்ளன. அதிமுகவில் பரிந்துள்ள அணிகளை வைத்து ஐபிஎல் மேட்ச் நடத்தலாம்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. மிசாவை பார்த்த இயக்கம் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம், மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பயணம் என பல வாக்குறுதி நிறைவேற்றுபட்டுள்ளது.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.