இந்தியாவிலேயே காஸ்ட்லியான வீட்டை வாங்கிய தொழிலதிபர் – விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலேயே மிக அதிக விலையிலான வீட்டை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் நீரஜ் பஜாஜ் வாங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில்  தொழிலதிபர்…

இந்தியாவிலேயே மிக அதிக விலையிலான வீட்டை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் நீரஜ் பஜாஜ் வாங்கியுள்ளார்.

தெற்கு மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில்  தொழிலதிபர் நீரஜ் பஜாஜ் 252 கோடி ரூபாய் வீடு வாங்கியுள்ளார். லோதா குழுமத்தை சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டி வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து நீரஜ் பஜாஜ் இந்த வீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமான தொகைக்கு விற்கப்பட்ட வீடு ஆகும்.

சென்ற மாதம் இதே மும்பை நகரில் வொர்லி டவரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்த மற்றொரு ஆடம்பர வீடு ரூ.240 கோடிக்கு விலை போனது. அனைத்து விதமான சொகுசு வசதிகளும் உள்ள அந்த வீட்டை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவரான தொழில் அதிபர் பி. கே. கோயங்கா வாங்கி இருந்தார். அப்போது அதுதான் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீடாக இருந்தது. ஆனால் ஒரே மாதத்திற்கு உள்ளாகவே நீரஜ் பஜாஜ் ரூ.252 கோடிக்கு வீட்டை வாங்கி அந்த சாதனையை முறியடித்துவிட்டார்.

அண்மைச் செய்தி: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்

நீரஜ் வாங்கி இருக்கும் லோதா மலபார் டவர் வீட்டிற்காக ஒரு சதுர அடிக்கு ரூ.1.40 லட்சம் வீதம் செலவிட்டுள்ளார். லோதா மலபார் டவர் தெற்கு மும்பையில் கவர்னர் மாளிகைக்கு மிக அருகில் கட்டப்படுகிறது. 31 மாடிகள் கொண்ட 3 பிரிவுகளாக எழும்பிவரும் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையில்தான் உள்ளன. 2026ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் இதனைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.